சிவன்கோயில்களில் தேவாரப்பதிகம் பாடிவந்த சம்பந்தருக்கு திருச்சி கீழ் அன்பில் நகரிலுள்ள சத்தியவாகீஸ்வரரை வழிபட ஆசை. சிவன் சம்பந்தரைச் சோதிக்க காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடச் செய்தார். இதனால் கோயிலுக்குள் செல்ல முடியாத சம்பந்தர் கரையில் இருந்தபடியே பாடினார். எனவே கோயிலில் வீற்றிருந்த பிள்ளையார் தன் யானைக் காதை சாய்த்து சம்பந்தர் பாட்டைக் கேட்டார். இன்றுகூட இக்கோயிலில் செவி சாய்த்த விநாயகரைத் தரிசிக்கலாம்.