கும்பகோணம் அருகில் திருவைகாவூர் தலத்தில் உள்ள வில்வநாதர் கோயில் பிரசித்திப்பெற்றது. இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையின் அருகே அன்னையைப் பிரிய மனமில்லாதவராக காட்சியளிக்கிறார் குழந்தை கணபதி. சுமார் ஒன்றரை அடி உயரம். ஓரடி அகல அளவில் சிறிய மூர்த்தியாக தரிசனம் தருகிறார் இந்த பிள்ளையார்.