மருதமலை அடிவாரத்தில் படிக்கட்டுப் பாதையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது தான்தோன்றி பிள்ளையார் கோயில். இந்த விநாயகரை வணங்கிச்சென்றால் 18 படிகள் உள்ளன. சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட முடியாதவர்கள் இந்த பதினெட்டாம் படிக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.