கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கருவறையின் புறச்சுவர் மாடத்தில் உள்ளது. ‘நர்த்தன விநாயகர்’ சிற்பம். இடது காலை ஊன்றியபடி, வலது காலை தூக்கிய நிலையில் நான்கு கரங்களுடன் நடனமாடும் தோற்றத்தில் காட்சி தருகிறார் விநாயகர். இவரின் வலக்கரம் அங்குசத்தைப் பிடித்தும், மேல் இடக்கரம் உயர்த்திய நிலையிலும் கீழ் வலக்கரம் தந்தத்தை எழுத்தாணியாகப் பற்றியுள்ளது. முன்புறம் மத்தளம் கொட்டும் நிலையிலும், சங்கு ஊதும் நிலையிலும், கைத்தாளம் இசைக்கும் நிலையிலும் குள்ளமான மூன்று பூதகணங்கள் உள்ளன. இவர்களது இசைக்கு ஏற்ப விநாயகர் நடனமாடுவதான காட்சி பக்தியில் ஆழ்த்துகிறது.