பச்சை சாத்தி கோலத்தில் திருச்செந்தூர் சண்முகர் வீதியுலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2016 10:08
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் முருகன் கோயில் ஆவணி திருவிழாவில், நேற்று சுவாமி ’பச்சை சாத்தி’ கோலத்தில் தங்க சப்பரத்தில் காட்சியளித்ததார். திருச்செந்துாரில் ஆவணி திருவிழா ஆக.,22ல் கொடியேற்த்துடன் துவங்கியது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் குட வருவாயில் தீபாராதனை நடந்தது. நேற்று முன் தினம் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடந்தது. மாலை தங்க சப்பரத்தில் ’சிவப்பு சாத்தி’ கோலத்தில் வீதியுலா வந்தார். திருவிழா நாட்களில் எட்டாம் நாளான நேற்று, மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில், ’பச்சைசாத்தி’ கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை காலை 6.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளுகின்றனர். பின் ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடக்கிறது. செப்., 2 ல் மஞ்சள் நீராட்டு கோலத்தில் சுவாமியும் அம்பாளும் வீதியுலா வருகின்றனர். அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.