பதிவு செய்த நாள்
01
செப்
2016
11:09
ராமேஸ்வரம், :ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, ரூ. 70.44 லட்சம் கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்கு பிறகு நேற்று கோயில் மற்றும் உப கோயில்களில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் செலுத்திய ரொக்க பணம் ரூ.70. 44 லட்சம், தங்கம் 56 கிராம், வெள்ளி 6 கிலோ 240 கிராம் வருவாயாக கிடைத்தது. கோயில் இணை ஆணையர் செல்வ ராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் ராஜாங்கம், கக்காரின், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் முன்னிலையில் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் உண்டியலை பிரித்து கணக்கிட்டனர்.