செம்பட்டி, ரிஷி பஞ்சமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில், கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன், சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் நடந்த தீபாராதனையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். * பாலநாகம்மாள் கோயில், அம்பாத்துரை ரோடு தேவி கருமாரியம்மன் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், ரிஷி பஞ்சமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.