Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடி ... மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி கலை விழா மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதிக்கு அவினாசி மலர் அங்கி பயணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 செப்
2011
11:09

திருப்பூர்: திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில், வெங்கடேச பெருமாளுக்கு புஷ்ப அங்கி சாற்றுவதற்காக, அவினாசியில் இருந்து, மலர் மாலைகள் நேற்றிரவு அனுப்பப்பட்டன. திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு, ஆண்டுதோறும் அவினாசியில் உள்ள மலர் நிலையத்தில் இருந்து, புஷ்ப அங்கி அனுப்பி வைக்கப்படுகிறது. திருமஞ்சன விழாவுக்காக, சகல விதமான மலர் மாலைகளும் திருப்பூர் தொழிலதிபர்களின் அன்பளிப்பாக, திருப்பதி பெருமாளுக்கு சாற்றப்படுகின்றன. மலர் நிலைய உரிமையாளர் பாபு கூறியதாவது: திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளுக்கு, 2009ம் ஆண்டு செப்., 12ம் தேதி திருப்பூரில் திருக்கல்யாண உற்சவ விழா விமரிசையாக நடந்தது. அவ்விழாவுக்கு, அவினாசியில் இருந்து மலர் மாலைகள் தொடுத்து கொடுத்திருந்தோம். திருமலை நிர்வாகிகளுக்கு, மலர் மாலைகள் தொடுத்திருந்தது மிகவும் பிடித்தது. அன்று முதல், திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அவினாசியில் இருந்து மலர் மாலைகள் பெறப்படுகின்றன. இங்குள்ள தொழில் அதிபர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நாளை துவங்கும் பிரம்மோற்சவ விழாவிற்காக, அவினாசியில் இருந்து, 11 வகையான, 52 மாலைகள் தயாரித்து அனுப்பப்படுகின்றன. தேவஸ்தான பஸ் மூலமாக, அவினாசியில் இருந்து நேற்றிரவு அனுப்பப்பட்டது. இதை மலர் நிலையத்தார் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இவ்வாறு பாபு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; விஷ்ணு துர்க்கைக்கு நடந்த ராகு கால சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம்பூண்டியில், விஜயநகர பேரரசர் சதாசிவ தேவராயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar