Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வால்பாறை கோவில்களில் பிரதிஷ்டை ... நெல்லையில் 62 விநாயகர் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் விசர்ஜன ஊர்வலம் அமர்க்களம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
12:09

கூடலுார் : கூடலுாரில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. கூடலுாரில், இந்து முன்னணி சார்பில், ராஜகோபாலபுரம் ஓம் சக்தி கோவிலில் இருந்து, விநாயகர் விசர்ஜன ஊர்வலம் துவங்கியது. இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராஜேஷ் துவக்கி வைத்தார்.ஊர்வலத்துக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். ஊர்வலம் ஊட்டி மைசூர் சாலை வழியாக, தொரப்பள்ளி குணிலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட,41 சிலைகள் அங்குள்ள ஆற்றில், கரைக்கப்பட்டன. நிர்வாகிகள் ராஜா, சுனில்குமார், பிரஜோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.எச்.பி., சார்பில், கூடலுார் நகராட்சி அலுவலகத்திலிருந்து துவங்கிய ஊர்வலத்தை வக்கீல்கள் குமரேசன், பரசுராமன், கருணாநிதி ஆகியோர் துவக்கி வைத்தனர். விழா குழு தலைவர் சின்னதம்பி, செயலாளர் ஆனந்தசயனன், பொருளாளர் பாஸ்கரன், துணை தலைவர்கள் கிருஷ்ணன், மனோஜ், ராதாகிருஷ்ணன், துணை செயலாளர்கள் சங்கரன், சசி முன்னிலை வகித்தனர். ஊர்வலம், ஊட்டி மைசூர் சாலை, பழைய கோர்ட் சாலை வழியாக இரும்புபாலத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட,78 சிலைகள் பாண்டியார் பொன்னம்புழா ஆற்றில் கரைக்கப்பட்டன. மசினகுடி விநாயகர் கோவிலில் துவங்கிய ஊர்வலம், மசினகுடி நகர் மற்றும் மாயார் சாலை வழியாக சென்று, மரவகண்டி அணையில் கரைக்கப்பட்டது.

* நடுவட்டத்தில் வி.எச்.பி., சார்பில் நடந்த விசர்ஜன ஊர்வலத்தில், ௯ சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. வழி நெடுகிளும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நடுவட்டம் பஜார் வரை சென்ற ஊர்வலம் நிறைவடைந்தது. டி.ஆர்.பஜார் அணையில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதில், நிர்வாகிகள் ரவி, ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

*பந்தலுார் தாலுகாவில் நடந்த விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்ற சிலைகள் அனைத்தும், ரிச்மவுண்ட் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து, 64 சிலைகள், பொன்னானி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar