புதுச்சேரி: முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் கோவிலில் திருமால் கருட சேவையில் எழுந்தருளி அருள் பாலித்தார். முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் கோவில் கடந்த 95 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. இங்கு, 1921ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பஜனை, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், வார பூஜைகள் நடந்து வருகிறது. புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான நேற்று முன்தினம் திருமால் கருட சேவையில் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக காலை 7 மணிக்கு திருமாலுக்கு திருமஞ்சனம் நடந்தது. திருமால் கருட சேவையை பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.