Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமானுஜ பஜனை மடத்தில் கருட சேவையில் ... நிறைவு பெற்றது மஹா மந்த்ர நாம ஸங்கீர்த்தனம்! நிறைவு பெற்றது மஹா மந்த்ர நாம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எட்டு ஆண்டுகளுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் திறப்பு
எழுத்தின் அளவு:
எட்டு ஆண்டுகளுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் திறப்பு

பதிவு செய்த நாள்

19 செப்
2016
11:09

திருக்கோவிலுார்: நெற்குணம் கிராமத்தில், கடந்த எட்டு ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த மாரியம்மன் கோவில், வழிபாட்டுக்காக  திறக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த நெற்குணம் கிராமத்தில்  மாரியம்மன் கோவிலில்,  எட்டு ஆண்டுகளுக்கு முன்,  திருவிழா நடத்துவது தொடர்பாக, ஒரே பிரிவை சேர்ந்த இரு தரப்பினர் இடையே  மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கோவில் பூட்டப்பட்டது.

இந்த ஆண்டு கோவில் திருவிழா நடத்த கிராம மக்கள் முயற்சி மேற்கொண்டனர். இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருவாய்,  காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வும் எட்டப்பட்டவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் ஒன்று திரண்டு, கோவிலை திறந்து பூஜை செய்யப்போவதாக அறிவித்ததால் பதற்றம்  ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் ஆர்.டி.ஓ., செந்தாமரை தலைமையில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கிராமமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.  டி.எஸ்.பி., கீதா, கண்டாச்சிபுரம் தாசில்தார் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பொது மக்கள் வழிபாட்டிற்காக கோவிலை  திறப்பது என அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து, நேற்று காலை 10:30 மணிக்கு டி.எஸ்.பி., தாசில்தார் முன்னிலையில் கோவில் பூட்டு திறக்கப்பட்டது. கிராம மக்கள்  தென் பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். காசி குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை  செய்யப்பட்டு, மூலஸ்தான அம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பூட்டப்பட்ட கோவில்  திறக்கப்பட்டு, வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டதால் கிராம  மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar