Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிகை அம்பாள் கோவில் மகா ... பல்லவர் கால கிரந்த எழுத்துக்கள் மகேந்திரவாடியில் கண்டுபிடிப்பு பல்லவர் கால கிரந்த எழுத்துக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி பெருமாள் கோவில் கொடிமரம் சேதம்: பக்தர்கள் அதிருப்தி
எழுத்தின் அளவு:
திருத்தணி பெருமாள் கோவில் கொடிமரம் சேதம்: பக்தர்கள் அதிருப்தி

பதிவு செய்த நாள்

19 செப்
2016
12:09

திருத்தணி : திருத்தணி விஜயராகவ பெருமாள் கோவிலில், கொடிமரம் சேதம் அடைந்தும், அகற்றப்படாததால் பக்தர்கள் நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், நந்தி ஆற்றின் கரையோரம் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், ஆறுமுக சுவாமி, விஜயராகவ பெருமாள் மற்றும் விஜயலட்சுமி தாயார் ஆகிய மூன்று கோவில்கள் தனித்தனியாக உள்ளன. இந்த கோவில்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக விஜயராகவ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம் முழுவதும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வர்.

இதுதவிர, புரட்டாசியில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை வழிபட்டு, பிரசாதங்கள் வினியோகம் செய்வர். இந்நிலையில், விஜயராகவ பெருமாள் கோவிலின் முன் அமைக்கப்பட்ட கொடி மரம் சேதம் அடைந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்று வரை கோவில் நிர்வாகம் அகற்றி புதிய கொடிமரம் நடுவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதுதவிர, மூலவர் சன்னிதி மற்றும் கோவிலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், பெருமாளை தரிசிக்க முடியாது. காரணம், இன்வெர்ட்டர் வசதியில்லாததால், விளக்குகள் எரிவதில்லை. ஒவ்வொரு மாதமும் மின்வாரிய துறையினர் பராமரிப்பு பணிகள் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி மின்சாரம் இல்லாததால், பக்தர்கள் பெருமாளை வழிபட சிரமப்படுகின்றனர். எனவே, கோவிலின் கொடி மரத்தை மாற்றியும், விளக்குகள் எரிவதற்கு இன்வெர்ட்டரும் அமைத்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar