Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருத்தணி பெருமாள் கோவில் கொடிமரம் ... ஆனந்த வரதராஜ பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லவர் கால கிரந்த எழுத்துக்கள் மகேந்திரவாடியில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பல்லவர் கால கிரந்த எழுத்துக்கள் மகேந்திரவாடியில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

19 செப்
2016
12:09

சென்னை: அரக்கோணம் அருகே உள்ள மகேந்திரவாடியில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த, கிரந்த எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அரக்கோணம் ஒன்றியம், மகேந்திரவாடியில் உள்ள பல்லவர் கால குடைவரை கோவிலை ஆய்வு செய்த, தொல்லியல் ஆய்வாளர் தீபிகா, அங்கு, கி.பி., 7ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பல்லவர் கால கிரந்த எழுத்துக்களை கண்டுபிடித்துள்ளார். இது குறித்து, தீபிகா கூறியதாவது: நான், பல்லவர் சிற்பங்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து வருகிறேன். சமீபத்தில், பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்து, 65 கி.மீ., தொலைவில், மகேந்திரவாடியில் உள்ள, முதலாம் மகேந்திர வர்மனின், விஷ்ணு குடைவரை கோவிலை ஆய்வு செய்தேன். அங்கு, மகேந்திர விஷ்ணுகிரிகம் உள்ளிட்ட கிரந்த எழுத்துக்கள் உள்ளதை, 1896ல் கண்டுபிடித்து ஆவணப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், குடைவரை கோவிலின் வடக்கில் உள்ள பாறையில், நான் ஆய்வு செய்த போது, பல்லவர் காலத்தைச் சேர்ந்த, நீ என்ற கிரந்த எழுத்தைக் காண முடிந்தது. அது குறித்து, என் ஆசிரியரும், தமிழக முன்னாள் தொல்லியல் கண்காணிப்பாளருமான வசந்தியிடம் கூறினேன். அவரும், அது குறித்த பதிவுகள் ஏதும், இதுவரை இல்லை என, உறுதி செய்தார். பின், எழுத்துக்கள் இருந்த பாறையில், சிறிது நீர் ஊற்றி ஆராய்ந்த போது, மேலும், சில எழுத்துக்களைக் காண முடிந்தது. தொடர்ந்து, எஸ்டெம்பேஜஸ் முறையில் நகல் எடுத்த போது, 7, 6 என்ற எண்ணிக்கையில், இரண்டு வரிகளில், அவநீதசித்தன் என, எழுதப்பட்டு இருந்தது. அது, முதலாம் மகேந்திர வர்மனின் பட்டப்பெயர்களில் ஒன்றாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar