பதிவு செய்த நாள்
26
செப்
2016
11:09
சிக்கல்: ராமநாதபுரம் மாவட்டத்தில், 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிலையை, கிராம மக்கள் வழிபடுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் அருகே மேலக்கிடாரம் கிராமத்தில், 120 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, புதைந்த நிலையில் இருந்த பீடத்தில் இருந்து, 5 அடி உயரம், 3 அடி அகலமுடைய கருங்கல் மகாவீரர் சிலை, 10 ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது.மக்கள் சிறிய அளவிலான கட்டடம் எழுப்பி, அதில், மகாவீரர் சிலையை, பிரதிஷ்டை செய்தனர். வடக்கு நோக்கி உள்ள இச்சிலைக்கு வெள்ளி, செவ்வாய் மற்றும் பண்டிகை காலங்களில், வாழைப்பழம், பால் படையல் செய்து, வணங்கி வருகின்றனர்.