பதிவு செய்த நாள்
27
செப்
2016
11:09
மீஞ்சூர்: விநாயகர் கோவில் குளம், பாசி படிந்தும், குடியிருப்புகளின் கழிவுநீராலும் பாழாகி வருகிறது.
மீஞ்சூர் அடுத்த, நந்தியம்பாக்கம் பகுதியில், தொள்ளாயிரம் காத்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருக்குளத்தில் தண்ணீர் இருந்தும், அதை யாரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது; குளம் முழுவதும் பாசி படிந்துள்ளது. மேலும், குடியிருப்புகளின் கழிவுநீர் குளத்தில் விடப்படுவதாலும், படித்துறைகள் பராமரிப்பு இன்றி உடைந்தும், செடிகள் வளர்ந்தும் காணப்படுவதால், பக்தர்கள் அதிருப்தியடைந்து உள்ளனர். மேற்கண்ட கோவில் குளத்தை துார் வாரவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.