நெல்லை அம்பாசமுத்திரத்தில் உள்ள காக்கையநல்லூரில் வயிறு வெடித்த பிள்ளையார் அருள்கிறார். திருச்செந்தூர் கோயிலுக்கு தானிய வசூலுக்காக காக்கையநல்லூருக்கு வந்த புலவருக்கு, சரியான விளைச்சல் இல்லாததால் நெல் கிடைக்கவில்லை. ஆனால், அந்த ஊர்ப் பிள்ளையாருக்கு மட்டும் தினமும் தவறாமல் நைவேத்தியம் நடப்பதைக் கண்டு, உன் தம்பிக்கு அங்கே உணவுக்கே நெல் இல்லை. அப்படியிருக்க உனக்கு மட்டும் தினமும் நைவேத்தியம் ஏன்? உன் வீங்கிய வயிறு வெடிக்காதோ? என்று வருத்தமுடன் பாட, உடனே பிள்ளையாரின் வயிறு வெடித்தது. அதே திருக்கோலத்திலேயே இங்கு பிள்ளையாரை தரிசிக்கலாம்.