நத்தம், நத்தம் அருகே மூங்கில்பட்டியில் புரவி எடுப்பு விழா நடந்தது. மூங்கில்பட்டியில் வீரன்பட்டாணி சுவாமி கோயில் உள்ளது. இங்கு புரவி எடுப்புவிழாவை முன்னிட்டு மூங்கில்பட்டி அம்மன் குளத்தில் சுவாமி சிலைகள் மற்றும் வாகனங்கள் அலங்கரிக்கப்பட்டது. அங்கிருந்து முத்தாலம்மன் கோயில் அருகே உள்ள மந்தைக்கு சுவாமி கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதை தொடர்ந்து அருகில் உள்ள குதிரை பொட்டலுக்கு சுவாமி ஊர்வலமாக புறப்பட்டு சென்றது. அங்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.