Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கொலு பொம்மைகள் விற்பனை ஜோர் மூங்கில்பட்டியில் புரவி எடுப்பு விழா மூங்கில்பட்டியில் புரவி எடுப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரையில் மழை வேண்டி வினோத திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2016
12:09

மானாமதுரை, மானாமதுரையில் மழை வேண்டி புரட்டாசியில் எல்லைப் பிடாரியம்மனுக்கு மட்டன், சிக்கன், முட்டை, மீன், தீப்பந்தங்களுடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக வந்து விநோத திருவிழாவை கொண்டாடினர்.

Default Image
Next News

புரட்டாசியில் தமிழகத்தில் பெரும்பாலும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது வழக்கம். ஆனால் மானாமதுரையில் புரட்டாசி மாதத்தில் விரதமிருந்து அசைவ உணவு வகைகளை அம்மனுக்கு படைத்து வழிபடுகின்றனர். மானாமதுரை நகரை காக்கும் தெய்வம் எல்லை பிடாரி அம்மன்.இக்கோயிலில் புரட்டாசி மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை காப்பு கட்டி விரதமிருக்கின்றனர்.

ஒரு வாரம் விரதமிருந்த பக்தர்கள் புத்தம் புதிய மண் பானைகளில் மட்டன், சிக்கன், மீன், முட்டை, கொழுக்கட்டை, பணியாரம் ஆகிய உணவு வகைகளை சமையல் செய்து வர்ணம் தீட்டிய மண்பானைகளில் சாதத்துடன் சேர்த்து தலையில் சுமந்து ஊர்வலமாக வருகின்றனர். சாதத்தின் நடுவே தீப்பந்தத்தை கொளுத்தி வைத்து நகரின் அனைத்து வீதிகளின் வழியே வலம் வருகின்றனர்.இந்தாண்டு திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் விரதமிருந்த பக்தர்கள் அசைவ உணவு வகைகளுடன் ஊர்வலமாக அம்மன் கோயிலை வந்தடைந்தனர். அங்கு அசைவ உணவு வகைகளை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். வழிபாடு குறித்து கணேசன் கூறுகையில்: செவ்வாய் சாட்டு என்று அழைக்கப்படும் இந்த திருவிழாவில் மட்டன்,சிக்கன் ஆகியவற்றை வீட்டிலேயே சமைத்து மண்பாத்திரங்களை இட்டு ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படையல் செய்து வழிபடுகிறோம். பொதுவாக கோயில்களில் தான் கிடா வெட்டி வழிபடுவது வழக்கம்.ஆனால் நாங்கள் வீட்டில் சமையல் செய்து கோயிலில் வந்து வழிபடுகிறோம்.இவ்வாறு செய்வதால் அம்மன் மனம் குளிர்ந்து மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar