Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி நான்காம் நாள் (01.10.11) ... நவராத்திரி ஏழாம் நாள் (அக்.4) வழிபாடு! நவராத்திரி ஏழாம் நாள் (அக்.4) வழிபாடு!
முதல் பக்கம் » நவராத்திரி வழிபாடும் சிறப்பும்!
நவராத்திரி ஐந்தாம் நாள் (02.10.11) வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 அக்
2011
12:10

அம்பிகையை நாளை மகேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றுடன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். இவளை மஹதீ என்று அழைப்பர். அளவிட முடியாத பெரும் சக்தியாகவும், சர்வமங்களம் தருபவளாகவும், தர்மத்தின் வடிவமாகவும் இருக்கிறாள். உழவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், அலுவலகங்களில் பணி செய்பவர்களுக்கு கேட்கும்வரம் தருவாள். நாளை மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறாள்.  மக்கள்நலனில் அக்கறை கொண்ட பெண்ணரசியான மீனாட்சி, மீன் எப்படி கண்களை இமைக்காமல் முட்டைகளை பார்த்து குஞ்சாக்குகிறதோ அதுபோல, தன் அருள்பார்வையால் உயிர்களை நல்வழிப்படுத்துகிறாள். அதனால், மீன் போன்ற கண்களை உடையவள் என்னும் பொருளில் மீனாட்சி, கயற்கண்ணி என்ற பெயர்களோடு விளங்குகிறாள். அவள் ஆளும் நகரமும் தூங்கா நகரமாக உள்ளது. மலையத்துவஜ பாண்டியனின் மகளான மீனாட்சி வில்பயிற்சி, வாள்பயிற்சி, குதிரையேற்றம் ஆகிய வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தாள். யாருக்கும் அஞ்சாத நெஞ்சுறுதியும், மனத்துணிவும் அவளின் இயல்பாக இருந்தன. ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்னும் விதத்தில் பாண்டியனும், தன் மகளுக்கு பட்டம் சூட்டி அழகு பார்த்தான். நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாள் அம்பிகை, அதே கோலத்தில் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறாள். சிம்மாசனத்தில் அமர்ந்து கிரீடம்,ஆபரணங்கள், செங்கோல் ஏந்தி காட்சி தருகிறாள். நாளை பட்டம் சூடும் பட்டத்துராணி மீனாட்சியின் பார்வை நம்மீது பட்டாலே, நம் வாழ்வில் வெற்றி உண்டாகும்.

நைவேத்யம்: கல்கண்டு சாதம்

பாட வேண்டிய பாடல்:

உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திருவுள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோவியமே! மதுகரம் வாய்
மடுக்கும் குழற்கா டேந்தும்
இளவஞ்சிக் கொடியே! வருகவே!
மலையத்துவசன் பெற்ற
பெருவாழ்வே! வருக வருகவே!

 
மேலும் நவராத்திரி வழிபாடும் சிறப்பும்! »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிப்பாள். மஹாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். ... மேலும்
 
temple news
பெரிய பதவிகள் அடைய... சந்திரகாந்தா வழிபாடு!: உலகம் அனைத்தும் சக்தி மயம் என்ற தத்துவத்தை விளக்க வந்ததே, ... மேலும்
 
temple news
இன்று அம்பிகையை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். கவுமாரி, குமார கண நாதம்பா என்றும் ... மேலும்
 
temple news
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ ... மேலும்
 
temple news
விஜயதசமியோடு நவராத்திரி நிறைவு பெறுகிறது. இந்நாளில் பராசக்தியின் மூன்று வடிவங்களான சரஸ்வதி, லட்சுமி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar