Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ... முதல்வர் ஜெ., நலம்பெற கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2016
12:10

கோபி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கவுந்தப்பாடி அருகே காந்தி கோவிலில், சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடிக்கு அருகேயுள்ள, செந்தாம்பாளையத்தில், தேசப்பிதா காந்திக்கு கோவில் நிறுவப்பட்டுள்ளது. கடந்த, 1997 பிப்.,6ல் கும்பாபிஷேகம் நடந்தது. கையில் தடியுடன், கண்ணாடி அணிந்த, ஐந்து அடி உயர காந்தி சிலை, அதன் எதிரே அன்னை கஸ்தூரிபாய் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பிற நாட்களில் மூன்று வேளையும், பூஜைகள் நடக்கின்றன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை, 8:30 மணிக்கு, காந்தி மற்றும் அன்னை கஸ்தூரி பாய் சிலைக்கு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் மற்றும் புனித நீர் ஊற்றி மந்திரம் முழங்க அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதை தொடர்ந்து காந்தி சிலைக்கு, கதர் வேட்டி, கண்ணாடி மாட்டி, கையில் தேசிய கொடி சொருகி, விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் அன்னை கஸ்தூரி பாய் சிலைக்கும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. பூஜையில் செந்தாம்பாளையம், கவுந்தப்பாடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி குழந்தைகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar