திருக்கோவிலுார் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. விழாவின் நான்காம் நாளான நேற்று மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை புண்யாகவாசனம் கலசஸ்தாபனம் பிரகன்நாயகி அம்பிகை ஆவாகணம் செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடந்தது. 6:00 மணிக்கு மூலவர்க்கு மகா அபிஷேகம் உற்சவ மூர்த்தி பராசக்தி அம்பிகை வைஷ்ணவி அலங்காரத்தில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 7:00 மணிக்கு லலிதா சகசரநாமார்ச்சனை சோடசோபவுபச்சார மகா தீபாராதனை சதுர்வேத மற்றும் புஷ்பராகம் இசைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.