Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்திராயிருப்பு முத்தாலம்மன் ... ஒற்றுமை திருவிழா: மொகரம் பண்டிகையில் தீ மிதித்த இந்துக்கள்! ஒற்றுமை திருவிழா: மொகரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையில் விடிய விடிய நடந்த சக்தி தரிசனம்!
எழுத்தின் அளவு:
நெல்லையில் விடிய விடிய நடந்த சக்தி தரிசனம்!

பதிவு செய்த நாள்

12 அக்
2016
05:10

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தசரா விழாவின் நிறைவாக விடிய விடிய நடந்த சப்பர பவனி, சக்தி தரிசன நிகழ்ச்சியினால், நெல்லை நகரமே விழாக்கோலம் பூண்டது.

தசரா விழா என்றால் மைசூர் தான் நினைவிற்கு வரும். தென்னகத்தில் திருநெல்வேலியில் நடக்கும் தசரா விழாவும் பிரசித்தி பெற்றவை. திருநெல்வேலி நகரில் துர்க்கை அம்மன், மாரியம்மன், சுந்தராட்சி அம்மன், முத்தாரம்மன், உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், தங்கம்மன், அறம்வளர்த்த நாயகி அம்மன், பிட்டாபுரத்தி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், துர்க்கை அம்மன் உள்ளிட்ட 23 அம்மன்களின் சக்தி தரிசன விழா நேற்று இரவு துவங்கி காலை வரையிலும் நடந்தது. நெல்லையப்பர் கோயில் பெரியதேர் திடலில் அணிவகுத்த சப்பரங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக ரிஷப வாகனத்தில் நெல்லையப்பரும், தனுசு வாகனத்தில் காந்திமதி அம்பாளும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதே போல பாளை.,பகுதியிலும் உச்சினிமகாளி, தேவி மாரியம்மன், முப்பிடாதி உள்ளிட்ட 27 அம்மன்கோயில்களில் இருந்து சப்பர பவனி நடந்தது. நேற்று காலையில் ராமசாமி கோயில் முன்பாக சப்பர பவனி நடந்தது. தொடர்ந்து இரவில், போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது. விடிய விடிய நடந்த சப்பர பவனியின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நெல்லை போலீஸ் கமிஷனர் திருஞானம் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar