Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நெல்லையில் விடிய விடிய நடந்த சக்தி ... அய்யனார் கோயிலில் வேண்டுதல் பொம்மை சிலை எடுப்பு திருவிழா! அய்யனார் கோயிலில் வேண்டுதல் பொம்மை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒற்றுமை திருவிழா: மொகரம் பண்டிகையில் தீ மிதித்த இந்துக்கள்!
எழுத்தின் அளவு:
ஒற்றுமை திருவிழா: மொகரம் பண்டிகையில் தீ மிதித்த இந்துக்கள்!

பதிவு செய்த நாள்

12 அக்
2016
05:10

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடலில் முஸ்லிம்களின் மொகரம் பண்டிகையில் இந்துக்கள் தீமிதி திருவிழா நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்புவனம் அருகே உள்ளது முதுவன்திடல். முற்றிலும் இந்துக்களே வசிக்கும் இக்கிராமத்தில் பாத்திமா பள்ளிவாசலை குலதெய்வமாக அனைத்து தரப்பினரும் வழிபடுகின்றனர்.  கிராமத்தில் உள்ள அனைத்து பணியையும் பள்ளிவாசலில் வணங்கிவிட்டு தான் தொடங்குகின்றனர். கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் முதுவன்திடலில் ஏராளமான முஸ்லிம்கள் வசித்துள்ளனர். பிழைப்பு தேடி பலரும் வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்த போது இரு சமூக பண்டிகைகளும் கொண்டாடப்பட்டுள்ளது. தற்போது முஸ்லிம்கள் வெளியேறிய போதும் இன்று வரை இந்த பண்டிகையை கடைபிடித்து இங்குள்ளவர்கள் வருகின்றனர். மொகரம் நாளுக்காக ஒரு வாரம் முன்பிருந்தே காப்பு கட்டி விரதமிருக்கின்றனர். மொகரம் நாளன்று அதிகாலை 3 மணிக்கு கண்மாயில் நீராடி மாலை அணிந்து பள்ளிவாசல் முன் உள்ள திடலில் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பெண்கள் பள்ளிவாசல் முன் முக்காடிட்டு தலைமீது தீ கங்குகளை வாரி போட்டு கொள்கின்றனர். இதன் மூலம் தங்களை நோய் நொடி அண்டாது என்பது நம்பிக்கை. அரை நூற்றாண்டை கடந்து இன்று வரை நடைபெறும் மொகரம் திருநாள் சுற்றுவட்டார பகுதிகளில் வரவேற்பை பெற்றுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar