தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2016 11:10
புதுார், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் புரட்டாசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா நேற்று காலை 10:45 மணிக்கு நடந்தது.இக்கோயில் தெப்ப உற்சவ திருவிழா அக்.,3ல் காலை 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். அக்., 4 முதல் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் தல்லாகுளம் பகுதிகளில் வலம் வந்தார். அக்., 11 காலை தேரோட்டம், இரவு பூப்பல்லக்கு, அக். 14 காலை தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம், இரவு 7:00 மணிக்கு சப்தாவரணம் சாற்றுமுறை முடிந்து, 8:00 மணிக்கு பூச் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. காலை 10:20 மணிக்கு தேவியருடன் பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் திருமுக்குளம் வீதியை சுற்றி வலம் வந்தார். தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் காலை 10:45 மணிக்கு தெப்பத்தை சுற்றி ஒருமுறையும், மாலையில் 2 முறையும் வலம் வந்தார். இன்று உற்சவசாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை (பொறுப்பு) ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.