ஆத்தூர்: விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர் வெள்ளை விநயகர் கோவிலில், நேற்று மாலை, சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. அதையொட்டி, மூலவர் வெள்ளை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விநாயகருக்கு அருகம்புல் மாலை மற்றும் வண்ண மலர்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், ஆத்தூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.