சிக்கல்: சிக்கல் அருகே கொத்தன்குளம் சுந்தரராஜப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக அக்., 17 முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி தொடர்ந்து நடந்தது நேற்று காலை வானமாமலை மடம் ராமானுஜ ஜீயர் தலைமையில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை வானமாமலை மடத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.