பாதாள செம்பு முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 10:04
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டி பாதாளசெம்பு முருகன் கோயிலில், இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு பாலாபிஷேகம், பழக்காப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. ஏராளமான வெளிமாவட்ட பக்தர்கள், காத்திருந்து தரிசனம் செய்தனர்.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், விஸ்வரூப தரிசனம் நடந்தது. பால், பன்னீர், இளநீர் தயிர், தேன் உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விசேஷ பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது.
* சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு பழக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.