பல்லடம்: சித்திரை திருநாளான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, விவசாயம் செழிக்கட்டும் என, கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் அருளாசி வழங்கியுள்ளார்.
அவர் கூறியதாவது: சித்திரை மாதம் என்பது தமிழரின் புதிய தொடக்கங்களின் மாதமாகும். இந்நாளில் நம் மனங்களில் உள்ள தீய எண்ணங்களை நீக்கி, நல்ல எண்ணங்களை வளர்த்து, இறைநம்பிக்கையுடன் வாழ்வோம். அன்பும், அறமும், ஒற்றுமையும் நிறைந்த வாழ்வுடன், உண்மையான வளம் வேண்டும் என்பதை நினைவில் கொள்ள சித்திரை திருநாளில், குடும்ப ஒற்றுமை வளரவும், சமுதாயத்தில் அமைதி நிலவவும், விவசாயம் செழிக்கவும். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி அடையவும், இளைஞர்கள் நல்ல பாதையில் முன்னேறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அனைவரும் தர்மம். ஒழுக்கம், பணிவு ஆகியவற்றை பின்பற்றி. சமுதாய நலனுக்காக செயல்பட வேண்டும். அன்னையின் அருள் அனைவரையும் காக்க ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஆனந்தம் ஆகியவற்றை வழங்கட்டும். சித்திரை திருநாளில் அனைவருக்கும், 51 சக்தி பீட அலங்காரி அங்காளபரமேஸ்வரி அன்னையின் திருவருளும் ஆதிகுரு முதல்வர் ஞானகுருவின் குருவருளும் கிடைக்கட்டும். எல்லாம் நிறைவாகட்டும்.