Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஐப்பசி ... பிள்ளையார்பட்டி கோவிலில் உள்ளம் கவரும் கூரை ஓவியங்கள்! பிள்ளையார்பட்டி கோவிலில் உள்ளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர் மலையில் பக்தர்கள் பாதம் பாதுகாக்க கோயிலில் தரை விரிப்புகள்!
எழுத்தின் அளவு:
அழகர் மலையில் பக்தர்கள் பாதம் பாதுகாக்க கோயிலில் தரை விரிப்புகள்!

பதிவு செய்த நாள்

24 அக்
2016
10:10

அழகர்கோவில்: அழகர்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதங்களை வெயில் சூட்டிலிருந்து பாதுகாக்க நுழைவு வாயிலில் இருந்து கோயில் வரை பைபர் தரை விரிப்புகளை கோயில் நிர்வாகத்தினர் விரித்து உள்ளனர். அழகர் மலையில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயில், சோலைமலை முருகன் கோயில் நுாபுரகங்கை தீர்த்தத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதில் சுந்தரராஜ பெருமாள் கோயில் கோட்டை நுழைவு வாயிலில் உள்ள 18ம் படி கருப்பண சுவாமி சன்னதி அருகில் காலணிகள் பாதுகாப்பு அறை உள்ளது. இங்கிருந்து கோயில் வரை 300 மீட்டர் துாரம் பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும். கோயில் முழுவதும் மன்னர்கள் அமைத்த கருங்கல்லால் ஆன தரை உள்ளது. வெயில் காலங்களில் ஏற்படும் அதிக வெப்பத்தால் கருங்கல் தரையின் சூடு அதிகரிப்பதால் பக்தர்களால் நடக்க முடியவில்லை.

பக்தர்கள் வசதிக்காக சில ஆண்டுகளுக்கு முன் 18ம் படி கருப்பண சுவாமி சன்னதி முதல் கோயில் வரை சூடு பிரதிபலிக்காத வெள்ளை நிற கலவை பூசப்பட்டது. நாளடைவில் அவை காணாமல் போயின. பகலில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சூடு தாங்காமல் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்போது பக்தர்களின் பாதங்களை பாதுகாக்க 18ம் படி கருப்பண சுவாமி சன்னதி அருகில் இருந்து சுந்தரராஜ பெருமாள் சன்னதி வரை பைபர் தரை விரிப்புகளை கோயில் நிர்வாகத்தினர் விரித்துள்ளனர். இதனால் பகல் நேரங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தங்கள் பாதங்களை காத்துக் கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar