பதிவு செய்த நாள்
26
அக்
2016
12:10
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் நடந்தது. திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, ஐப்பசி மாத செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை விழாவையொட்டி, காலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 3:00 மணி முதல், 4:30 வரை, ராகுகால பூஜையில் திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி, மத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.