பதிவு செய்த நாள்
26
அக்
2016
12:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில், ராமசந்திர பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, கோவில் பட்டாச்சாரியார்கள் கோவிந்தராஜ், பத்ரி ஆகியோர், பூஜை செய்த பின் நடையை சாத்திவிட்டு சென்றார். பின், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்க வந்தபோது, கருவறை பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, தாயார் கழுத்தில் இருந்த, எட்டு கிராம் தாலி மற்றும் வெள்ளி சடாரி திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேத்துப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், வந்தவாசி அருகே தேசூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, அங்கிருந்த உண்டியலை திருடர்கள் திருடி சென்றனர். இது குறித்து தேசூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.