பதிவு செய்த நாள்
26
அக்
2016
12:10
வானுார்: தமிழக முதல்வர் ஜெ., பிறந்த தினமான மகம் நட்சத்திர நாளில், அவர் பூரண நலம் பெற வேண்டி, சிறப்பு யாகம் நடந்தது. விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.பி., தலைமையில், சிறப்பு யாகம் நடந்தது. இதில், கோவில் குருக்கள் வேதமந்திரங்கள் முழங்கி, கூட்டு பிரார்த்தனை செய்து, வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில், விழுப்புரம் எம்.பி., ராஜேந்திரன், எம்.எல்.ஏ., சக்கரபாணி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன், ஒன்றிய சேர்மன் சிவா, ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., கணபதி, மாவட்ட மகளிரணி செயலாளர் கண்ணம்மாள் இளம்வழுதி, பேரவை இணை செயலாளர் செந்தில், மாணவரணி செயலாளர் ராமசரவணன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் சுகுமார், துணை செயலாளர் ராஜவேலு, விக்கிரவாண்டி ஒன்றிய பேரவை செயலாளர் சரவணன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் குமார், ஊராட்சி தலைவர் வேணு, டி.வி., குமார், லலிதா ஆறுமுகம், இளைஞர் பாசறை வீரப்பன், மாவட்ட பிரதிநிதி அம்பேத்குமார், இலக்கிய அணி முருகன், பேரவை சிவக்குமார், ஊராட்சி செயலாளர் குணசேகர், பிரதிநிதி மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.