பதிவு செய்த நாள்
26
அக்
2016
12:10
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி கோவிலில், முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி வேள்வி மற்றும் சிறப்புபூஜை நடந்தது. விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் நடந்த ேஹாமம் மற்றும் சிறப்பு பூஜைக்கு, அ.தி.மு.க., நகர செயலாளர் பூர்ணராவ் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ஆனந்த், பேரவை செயலாளர் பலராமன் முன்னிலை வகித்தனர். இதில், மிரித்யு ஜெய ேஹாமம், ஆயுள் ேஹாமம், தன்வந்திரி ேஹாமம் நடந்தது. மாவட்ட ஜெ., பேரவை துணை தலைவர் ரமேஷ், நகர தலைவர் விஜயகுமார், வங்கி தலைவர் ஜெயக்கொடி ஏழுமலை, இயக்குனர்கள் தேவராஜ், கண்ணன், அய்யனாரப்பன், அசோக்குமார், வாசு, வெங்கடேஸ்வரன், கிருஷ்ணன், ஓட்டுனர் அணி தலைவர் முருகன், வழக்கறிஞர் முருகன், ஒன்றிய மகளிரணி செயலாளர் செங்கேணி அய்யனாரப்பன், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில செயலாளர் ஜார்ஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் அர்ச்சுணன், தயாளன், மாவட்ட பிரதிநிதி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.