கொடுமுடி: தமிழக முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்ப, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், நேற்று சிறப்பு யாகம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு தொடங்கிய யாகம், மதியம், 3:00 மணி வரை நடந்தது. இதை தொடர்ந்து, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. இதில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்ரமணி, ஈரோடு எம்.பி., செல்வக்குமார சின்னையன், முன்னாள் அமைச்சர் ராமசாமி உட்பட, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.