பதிவு செய்த நாள்
31
அக்
2016
12:10
விக்கிரவாண்டி: தொரவி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தில் உள்ள, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில், ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, வினாயகர், தட்சிணாமூர்த்தி, சிவகாமி உடனுறை நடராஜர், நந்தீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர், அருகம்புல் மாலையுடன் நந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்தார். சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதினர். பூஜையில் தொரவி வழக்கறிஞர் சம்பத், ரவி, புதுச்சேரி கந்தன்நாராயணசாமி, ஞானபிரகாசம், ஏனாதிநாத நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.