Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழா: ... கிணத்துக்கடவு சிவலோகநாதருக்கு அன்னாபிஷேகம் கிணத்துக்கடவு சிவலோகநாதருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2016
10:11

கார்த்திகை முதல் நாளான சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். இதனால் கோயில்களில் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்குவது வழக்கம். இந்த நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்குவர்.

Default Image
Next News

சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயில்களில் குருசுவாமி துணையுடன் மாலையணிந்து 41 நாட்கள் கடும் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாளான (16ம் தேதி) காலை முக்கிய கோயில்களில் குருசுவாமி துணையுடன் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர். இதனால் கோயில்களில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை அணியும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோயில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, மாலை அணிந்து கொண்டனர். நாகர்கோவில் நாகராஜாகோயில், பார்வதிபுரம் ஐய்யப்பன் கோயில், கன்னியாகுமரிபகவதிஅம்மன் கோயில், குமாரகோவில் முருகன் கோயில், வெள்ளிமலை முருகன்கோயில், மண்டைகாடு பகவதிஅம்மன் கோயில், வெட்டுவெந்நி சாஸ்தா கோயில், திருவட்டார், தக்கலை, குழித்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர்.

மாலையிட்ட பக்தர்கள் தினமும் காலை குளித்து கோயில்களுக்கு சென்று சரண கோஷம் எழுப்புவர். இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் சரண கோஷம் எதிரொலிக்கும். கார்த்திகை மாத சீசனையொட்டி கடைகளில் ருத்ராட்ச மாலைகள், துளசி மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இவைகள் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோன்று சபரிமலை செல்லும் பக்தர்கள் காவி, மற்றும் கறுப்பு துணிகள் அணிவதால், கடைகளில் காவி வேட்டியும், காவி துண்டும், அது போன்று கறுப்பு நிற வேட்டியும், துண்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா இன்று ... மேலும்
 
temple news
 – நமது நிருபர் –: ‘‘சத்தியம் என்பது எப்போதுமே ஒன்று தான். எந்நிலையிலும் அது மாறாமல் ... மேலும்
 
temple news
 வில்லிவாக்கம்: ஹிந்து ஆன்மிக சேவா ஸ்மிதி டிரஸ்ட் சார்பில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பைரவி திவ்ய பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar