Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news முதல்வர் ஜெ., பூரண குணமடைய எம்.எல்.ஏ., ... கார்த்திகை விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம் கார்த்திகை விளக்குகள் தயாரிப்பு பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவாலய திறப்பு விழா: இலவச வீடுகளுக்கு சாவி
எழுத்தின் அளவு:
தேவாலய திறப்பு விழா: இலவச வீடுகளுக்கு சாவி

பதிவு செய்த நாள்

23 நவ
2016
01:11

பந்தலுார்: பந்தலுார் அருகே, உப்பட்டியில் நடந்த தேவாலாய திறப்பு விழாவில், சிறப்பு திருப்பலி நடந்தது. பந்தலுார் அருகே  உப்பட்டியில் கடந்த, 1959ல் இருந்து, பத்தேரி மறைமாவட்டத்தின் கீழ், புனித ஜார்ஜ் மலங்கர கத்தோலிக்க தேவாலாயம் செயல்பட்டு  வருகிறது. பழமையான இந்த கட்டடத்தை புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவக்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்து,  புனரமைப்புக்கான திறப்பு விழா, நேற்று நடந்தது. பங்குதந்தை செபாஸ்டியான் வரவேற்றார். விழாவுக்கு வந்த, உயர் பேராயருக்கு  வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு,‘ஒன்பதாம் மணி’ வழிபாடு நடந்தது. பத்தேரி மறைமாவட்ட பேராயர் ஜோசப்மார்தோமஸ் பேசினார்.  மதியம், 2:30 மணிக்கு தேவாலாய அர்ச்சிப்பும், திரு தைலத்தால் புனிதப்படுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, உயர் பேராயர் கிளீம்ஸ்  காதோலிக்க பாவா மற்றும் ஆயர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.   பின், ராமநாதபுரம் மறை மாவட்ட ஆயர் மார்போல்  அருளுரை வழங்கினார். மாவேலிக்கர மறைமாவட்ட ஆயர் ஜோஸ்வா மார் இக்னேசியஸ் சிறப்புரை நிகழ்த்தினார். தேவாலாயம் சார்பில்  வீடில்லாத ஏழைகள் இருவருக்கு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, அதற்கான சாவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை  வழிபாடு, கூட்டு திருப்பலி,  முன்னாள் பங்கு தந்தைகளை கவுரவித்தல் நிகழ்ச்சிகள், ஆராதனை நடத்தப்படுகிறது.  ஏற்பாடுகளை கமிட்டி  நிர்வாகிகள் மத்தாய், கீவர்கீஸ், ஜோஸ், எல்தோ, தோமஸ், ஜோய் ஆகியோர் செய்திருந்தனர். செயலாளர் மத்தாய் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar