சபரிமலை: சபரிமலையில் தங்குவதற்கு ஆன்லைனில் அறைகள் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் தங்குவதற்கு தேவசம்போர்டு அறைகள் மட்டுமே உள்ளது. சுமார் 600 அறைகள் பல்வேறு கட்டிடங்களில் உள்ளது. தனியார் கட்டிடங்கள் இங்கு கிடையாது. சபரிமலை சன்னிதானத்தின் இடதுபுறம் செயல்படும் அக்காமடேஷன் அலுவலகத்தில் பக்தர்கள் நேரடியாக சென்று அறைகள் முன்பதிவு செய்யலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாலை நான்கு மணிக்கு நடை திறந்த பின்னரே அறைகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அறைகள் காலியாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆன்லைன் மூலமும் அறைகள் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. www.sabarimalaaccomodation.com என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம். 15 நாட்ககளுக்கு முன்னதாக மட்டுமே அறைகள் கிடைக்கும். 12 மணி நேரத்துக்கு முன்பதிவு செய்யப்பட்டு கூடுதல் நேரம் தேவைப்பட்டால் அக்காமடேஷன் அலுவலகத்தில் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் கூடுதல் நபர்கள் தங்கினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். முன்பதிவு செய்யும் போது கிடைக்கும் கூப்பணுடன் அக்காமடேஷன் அலுவலகம் வந்து அறைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அறைகள் கட்டண விபரம் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். மெகா இருமுடி கட்டு: கேரள மாநிலம் கோட்டயம் நிண்டூரை சேர்ந்த சோமன் ஆசாரி மெகா இருமுடி கட்டுடன் சபரிமலை வந்தார். அவர் கொண்டு வந்த நெய் தேங்காய்களின் எண்ணிக்கை 608. தேங்காயின் எடை 130 கிலோ. நெய் எடை 36 கிலோ. சுமடு துõக்கும் தொழிலாளியாக இருந்த இவர் 52 வயதிலும் ஐயப்பனை காண தொடர்நது ஐந்தாவது ஆண்டாக மெகா இருமுடி கட்டுடன் சபரிமலை வந்தார்.