பதிவு செய்த நாள்
26
நவ
2016
12:11
தம்மம்பட்டி: தம்மம்பட்டியில், மழை வேண்டி, சிறப்பு தொழுகை, நேற்று நடந்தது. ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பருவ மழை இல்லாமல், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. அதனால், மழை வேண்டி, ஜாமியா ஜமாத் சார்பில், தம்மம்பட்டி ஜாமியா பள்ளியில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக, முஸ்லிம்கள் ஊர்வலம் வந்தனர். மேலும், ஈத்கா பள்ளி வாசல் மைதானத்தில், இமாம் மன்சூர் அகமத் ரபானி தலைமையில், சிறப்பு தொழுகை நடத்தினார். இதில், செயலாளர் ஷாஜகான் உள்பட, ஏராளமான முஸ்லிம் சமுதாயத்தினர் பங்கேற்றனர்.