Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலைக்கு கேரள அரசு பஸ்சில் 2.77 ... சபரிமலை தூய்மைப் பணியில் மத்திய அதிவிரைவு படையினர் சபரிமலை தூய்மைப் பணியில் மத்திய ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை பெருவழி பாதை: பக்தர்களுக்கு கட்டுப்பாடு!
எழுத்தின் அளவு:
சபரிமலை பெருவழி பாதை: பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

பதிவு செய்த நாள்

28 நவ
2016
10:11

சபரிமலை: எருமேலியில் இருந்து, பெருவழி பாதை வழியாக பம்பை செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாலை, 5:00 மணிக்கு பின், எருமேலியில் இருந்து இந்த பாதையில் செல்ல முடியாது. எருமேலியில் இருந்து கரிமலை, அழுதை வழியாக செல்லும் பெருவழி பாதை, பாரம்பரிய பாதை ஆகும். மகிஷியை வதம் செய்த பின், அய்யப்பன், இந்த பாதை வழியாகவே சபரிமலை சென்றார் என்று ஐதீகம். பொதுவாக, மகரவிளக்கு சீசனில் தான் அதிக அளவில் இந்த பாதையில் பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால், தற்போது மண்டல சீசன் துவங்கிய நாள் முதலே, பக்தர்கள் இந்த பாதையில் வருகின்றனர்.

அன்னதானம்: இதனால், பக்தர்களுக்காக ஐயப்பா சேவா சங்கம், கரிமலையில் முகாம் அலுவலகம் திறந்துள்ளது. இங்கு பக்தர்களுக்கு அன்னதானமும், சுக்குநீரும் வழங்குகிறது. இந்த பாதையில் கோயிக்கல் காவு, கரிமலை, அழுதை, காளைகட்டி ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது. யானை மற்றும் காட்டு எருமை போன்ற விலங்குகள் நடமாட்டம் உள்ளதால், தற்போது மாலை, 5:00 மணிக்கு பின், பக்தர்கள் இந்த பாதையில் செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமேலி சாஸ்தா கோவிலில் நெய்யபிஷேகத்துக்கான டிக்கெட் கிடைக்கும். எருமேலி தனலெட்சுமி வங்கியில், அப்பம், அரவணைக்கான கூப்பன் கிடைக்கும். ஒருவர் கைதுசபரிமலையில் அன்னதானம், வழிபாடுகள், பூஜைகள் நடத்தி தருவதாக, பேனர் கட்டி பணம் வசூலிக்க முயன்றதாக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அச்சிராஜு, 62, என்பவரை சன்னிதானம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

24 மணி நேர தகவல் மையம்: சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக, தேவசம் போர்டின் தகவல் மையம், சன்னிதானம் பெரிய நடைப்பந்தலில் செயல்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என, ஆறு மொழிகளிலும் பக்தர்களுக்கு உதவ, ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த மையத்தின் போன் எண், 04735 - 202048. இந்த எண்ணில் தொடர்பு கொண்டால், சபரிமலையில் நடை திறந்து, அடைக்கும் நேரம், பூஜைகள் மற்றும் அதன் கட்டணங்கள், கூட்ட நிலைமை, கால நிலை போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம். 24 மணி நேரமும் இந்த மையம் செயல்படுகிறது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
கம்பம்: சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கம்பமெட்டு ... மேலும்
 
temple news
 சபரிமலை: பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை உள்ள கியூ காம்ப்ளக்ஸில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் முழுமையாக வராததால் காலை 6:00 மணிக்கு பின் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு சத்திரம் பாதையில் கால ... மேலும்
 
temple news
சபரிமலை; பக்தர்களின் வசதிக்காக பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு - சத்திரம் பாதையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar