பதிவு செய்த நாள்
28
நவ
2016
11:11
சேலம்: அம்மாபேட்டை, குமரகுரு சுப்பிரமணியர் கோவிலில், அறுபத்து மூவர் திருவீதி உலா நேற்று நடந்தது. சேலம், அம்மாபேட்டையில், பன்னிரு திருமுறை மன்றம் சார்பில், மூன்றாவது ஆண்டாக, அறுபத்து மூவர் திருவீதி உலா, நேற்று மாலை, 6:00 மணிக்கு நடந்தது. அதையொட்டி, காலை, 7:00 மணிக்கு, விநாயகர் உள்பட, அனைத்து சுவாமிகளுக்கும், திருமஞ்சன அபி ?ஷகம் நடந்தது. காலை, 9:30 முதல், 11:00 மணி வரை, திருமுறை இன்னிசை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கோவிலில் புறப்பட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவீதி உலா, திரு.வி.க., பாதை, புகையிலை மண்டி, மிலிட்டரி சாலை வழியாக, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.