காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இக் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். சனீஸ்வர பகவான் கோவிலில் தங்கத் தேர் இழுத்தல், அன்னதானம் உள்ளிட்டவைக்கு காணிக்கை அளிக்க கோவிலில் பல இடங்களில் உண்டியல் வைக்கப் பட்டுள்ளது. கோவிலில் உள்ள அன்னதானம் உண்டியல் நேற்று, தருமபுர ஆதினம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது.