Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோகி ராம்சுரத்குமார் மகராஜ் ஜெயந்தி ... நெய்யபிஷேக டிக்கெட்டுகள் தனலெட்சுமி வங்கி வினியோகம் நெய்யபிஷேக டிக்கெட்டுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலாற்றில் கிடைத்த வெள்ளி காசுகள் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை
எழுத்தின் அளவு:
பாலாற்றில் கிடைத்த வெள்ளி காசுகள் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை

பதிவு செய்த நாள்

02 டிச
2016
12:12

வேலுார்: பாலாற்றில் கிடைத்த வெள்ளி காசுகள், 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது, என, அரசு அருங்காட்சியக அதிகாரி சரவணன் கூறினார். வேலுார் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே, சிறுகரும்பூர் பாலாற்றில், நவ., 26ல், மணல் அள்ளிய போது, வெள்ளி காசு புதையல் கிடைத்துள்ளது. இதை யாருக்கும் தெரியாமல், மணல் அள்ளிய தொழிலாளர் கள், பிரித்து கொண்டனர்.தகவல் அறிந்த நெமிலி தாசில்தார் இளஞ்செழியன், போலீசார் உதவியுடன், சிறுகரும்பூர் கிராமத்திற்கு சென்று, ஏழு பேர் வீடுகளை சோதனை செய்து, 206 வெள்ளி காசுகளை பறிமுதல் செய்தார். காவேரிப்பாக்கம் போலீசார், அரசுக்கு சொந்தமான வெள்ளி காசுகளை பதுக்கி வைத்திருந்த, ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். வேலுார், அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன், நிருபர்களிடம் கூறியதாவது:வெள்ளி காசுகள், 250 ஆண்டு களுக்கு முந்தைய, 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஆற்காடு நவாப் கால காசுகளாகும். நாணயத்தில் பாரசீக மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. காசுகள் ஒவ்வொன்றும், 11.35 கிராம் முதல், 11.53 கிராம் எடையில் உள்ளன. காசுகள், சென்னை அரசு அருங்காட்சியக இயக்குனரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பாலாற்றில் இருந்து, நுாற்றுக்கணக்கான வெள்ளி காசுகளை பலரும் எடுத்து, அடகு கடைகளில் வைத்து, வெள்ளி கொலுசு மற்றும் தங்க நகை வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.இதனால், காவேரிப்பாக்கம் போலீசார், வெள்ளி காசுகளை நகை கடைகளில், அடகு வைத்தவர்கள் பட்டியலை வாங்கி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar