Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் ராஜகோபால் சித்தருக்கு 8ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூன்று ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த கோவில் பெண்கள் பூட்டை உடைத்து திறந்ததால் பரபரப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2016
03:12

புதுச்சேரி: இருதரப்பு மோதல் பிரச்னையால், மூன்று ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த கோவில் பூட்டை உடைத்து அப்பகுதி பெண்கள் பூஜை செய்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டை செயின்ட் பால்பேட் பகுதியில் ஏழை முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைப்பது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. ஒரு தரப்பினர் கோவிலை புனரமைத்து, 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, எதிர்தரப்பு புகார் எழுப்பியதால், தகராறு ஏற்பட்டது. இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலை இரு தரப்பினரும் சேர்ந்து பூட்டு போட்டு பூட்டினர். கடந்த 3 ஆண்டுகளாக கோவிலில் பூஜைகள், திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், சில மாதங்களாக செயின்ட் பால்பேட் பகுதியில் தொடர்ச்சியாக இறப்பு சம்பவங்கள் நடந்தது. கோவில் பூட்டி கிடப்பதால்தான் இதுபோன்ற துக்க சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் கருதினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கோவிலை திறக்க முடிவு செய்தனர். நேற்று காலை பெண்கள், பூட்டை உடைத்து கோவிலை திறந்தனர். கோவில் வளாகத்தை சுத்தம் செய்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், இருதரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் தலைமையில் இருதரப்பினர் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar