பதிவு செய்த நாள்
06
டிச
2016
03:12
சூளைமேடு: சூளைமேடு, அய்யப்பன் கோவிலில், 41ம் ஆண்டு திருவிழா மற்றும் மகா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. சென்னை, சூளைமேடு, கில் நகர் மத்திய பள்ளி சாலையில், அய்யப்பன் கோவில் உள்ளது. கடந்த, 1975ல், இக்கோவில் கட்டப்பட்டது. தற்போது, கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த, 3ம் தேதி, மகா கணபதி, மகாலட்சுமி, நவகிரக ஹோமங்களுடன் மகா கும்பாபிஷேகம் மற்றும் 41ம் ஆண்டு திருவிழா துவங்கியது. அதையடுத்து, மாலை யாக சாலை பிரவேசம், முதல் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து, 4ம் தேதி, விமான கலச ஸ்தாபனம், யந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜையுடன், கும்பாபிஷேகம் துவங்கியது. காலை, 9:00 மணிக்கு, மகா பூர்ணாஹூதி, கிரஹப்ரீதி கலசம் புறப்படுதல் நடந்தது. பின், விமான கலச பூஜை நடந்தது. தொடர்ந்து, 9:45 மணிக்கு, விமான மகா கும்பாபிஷேகம் மற்றும் 10:00 மணிக்கு, மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை, அய்யப்ப சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, 7ம் தேதி முதல், மண்டலாபிஷேகம் துவங்குகிறது.