பதிவு செய்த நாள்
09
டிச
2016
10:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று அ.தி.மு.க., சார்பில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நகர செயலாளர் செல்வம் தலைமையில், ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நேற்று மாலை அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலம் அ.தி.மு.க., மாவட்ட அலுவலகத்திலிருந்து துவங்கி பஸ் ஸ்டாண்ட், சன்னதி தெரு, காந்தி சிலை வழியாக, அருணாசலேஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. அங்கு அ.தி.மு.க., தொண்டர்கள், நெய் தீபம் ஏற்றியும், சுவாமி சன்னதி கருவறை எதிரில் உள்ள நந்தியம் பெருமான் அருகில், மோட்ச தீபம் ஏற்றியும் பிரார்த்தனை செய்தனர். இதில், முன்னாள் அமைச்சர் எஸ்.ராமசந்திரன் உட்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.