Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை தீப திருவிழாவையொட்டி ... ஊத்துக்கோட்டை கால பைரவருக்கு அஷ்டமி பூஜை ஊத்துக்கோட்டை கால பைரவருக்கு அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெளிகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவில் புனரமைக்கப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2016
11:12

ஆர்.கே.பேட்டை: பராமரிப்பு இன்றி கிடக்கும், வெளிகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவிலில், கொடிமரம் மற்றும் கோவில் கட்டுமானம் சிதைந்து கிடக்கிறது. இதை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பள்ளிப்பட்டு அருகே, கொற்றலை ஆற்றின் மூல நதிகளில் ஒன்றான, குசா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, வெளிகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவில்.

Default Image
Next News

வெளிகரம் கிராமத்தின் வடக்கே, இயற்கை எழில் சூழந்த இந்த பகுதியில், உயர்ந்த மலையுச்சியில், சமதளத்தில் அமைந்துள்ள மரகதவள்ளி உடனுறை சோமநாதீஸ்வர் கோவில், 100 ஆண்டுகள் பழமையானது. இந்த மலைக்கோவிலுக்கு, சீரான படிகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டு வழியில், புடைப்பு சிற்பமாக எழுப்பப்பட்ட வழித்துணை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. 600 படிகளுக்கும் மேலாக, கரடு முரடான பாதை காணப்படுகிறது. மலை உச்சில், 5 ஏக்கர் பரப்பில், சமதளமான பரப்பு காணப்படுகிறது. சோமநாதீஸ்வரர் மற்றும் மரகதவள்ளி அம்மனுக்கு தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிமரத்தின் வடகிழக்கில், கால பைரவர் மற்றும் சூரியனார் கோவில்களும் உள்ளன. மர துாணால் அமைந்துள்ள கொடிமரம், மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்பட்டு, சிதைந்து வருகிறது. கோவில் கட்டடமும் மேற்பகுதியில் சிதைந்துள்ளது.

வெளி பிரகாரத்தில் அமைந்து உள்ள சண்டிகேஸ்வரர் சன்னிதி, மிகவும் எளிமையாக, கல்துாண்களுக்கு இடையே எழுப்பப்பட்டு உள்ளது. மூலவர் சோமநாதீஸ்வரர் லிங்கம், ராமேஸ்வரத்தில் உள்ளது போன்று உருவத்தில் மிகவும் சிறியது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை மாதம் திங்கள் கிழமைகளில் சிறப்பு உற்சவம் நடைபெறுகிறது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த, வெங்கல்ராஜிகுப்பம், ஐ.வி.பட்டடை, சாணாகுப்பம், வெளிகரம், பள்ளிப்பட்டு, குமாரராஜிபேட்டை, பெருமாநல்லுார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும், ஆந்திர மாநிலம், சத்திரவாடா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், உற்சவத்தின் போது தேவாரம் முற்றோதல் நடத்துகின்றனர். கோவிலின் பின்புறம், இயற்கையாக அமைந்து தீர்த்த குளம் உள்ளது. தென்மேற்கில் நாகாலம்மன் கோவிலும் உள்ளது. சோமநாதீஸ்வரர் மலைக்கோவிலுக்கு நேர் கிழக்கில், நெடியம் கஜகிரி மலை மீது செங்கல்வாரய சுவாமியும், தென் கிழக்கில், பொதட்டூர்பேட்டை மலை மீது விநாயகர் கோவிலும் அமைந்திருப்பது இறைவனின் மகிமை என, பக்தர்கள் புளகாங்கிதம் அடைகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில் சாஸ்திர முறைப்படி இன்று வருடாந்திர சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 21.5 சவரன் தங்க கிரீடம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar