பதிவு செய்த நாள்
17
டிச
2016
03:12
உடல்பலமும் மனத்துணிவும் கொண்ட கடக ராசி அன்பர்களே!
சுக்கிரனின் நற்கருணையோடு இந்த புத்தாண்டு உங்களுக்குத் தொடங்குகிறது. ஆண்டின் முற்பகுதியில் பெண்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். குருபகவான் ஜன.16ல் 4-ம் இடமான துலாம் ராசிக்கு அதிசாரமாக மாறுகிறார். குருபகவான் 4-ல் இருப்பது சிறப்பானது அல்ல என்றாலும் அவர் நீண்டநாள் அங்கிருக்க மாட்டார். அவர் மார்ச் 10 முதல் ஆக.31 வரை வக்ரம் அடைந்து மீண்டும் கன்னி ராசிக்கு மாறுவதால் கெடுபலன் தர மாட்டார். ராகு 2-ம் இடமான சிம்மத்தில் குடும்ப பிரச்னையை ஏற்படுத்தி இருக்கலாம். ஜூலை 26ல் ராகு, உங்கள் ராசிக்கு வருவதால் வீண் அலைச்சல், முயற்சியில் தடையை உருவாக்க இடமுண்டு.
கேது 8-ம் இடமான கும்பத்தில் இருந்து உடல்நலக்குறைவு தந்திருக்கலாம். ஜூலை 26ல் அவர் 7-ம் இடமான மகரத்திற்கு வருவதால் மனைவி வகையில் பிரச்னை, வீண் அலைச்சலை ஏற்படுத்தலாம். சனி பகவான் 5ல் இருந்தாலும், அவரது 7-ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளது. நன்மை மேலோங்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் உங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பர். அவர் ஏப்.10 முதல் ஆக.6 வரை வக்ரம் அடைவதால் நற்பலன் குறையும். அவர் டிச.18ல் தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். அதன் பின் சுபபலன் உண்டாகும். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். தேவை அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுப விஷயத்தில் நல்ல முடிவு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குருவின் வக்ர காலத்தில் குடும்பம் வளர்ச்சி பெறும். மார்ச்10க்கு பிறகு உறவினர்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். தம்பதியினரிடையே அன்பு மேலோங்கும். ஜூலை 25க்கு பிறகு கேதுவால் மனைவி வழியில் பிரச்னைகள் குறுக்கிடலாம். விட்டுக்கொடுத்து போவது நல்லது.
தொழில், வியாபாரம்: எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், கேதுவால் திடீர் செலவு ஏற்படலாம். ஏப்ரல் மாதத்திற்கு பின் தொழில் ரீதியான பயணம் ஆதாயத்தைக் கொடுக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். ஜூலை மாதத்திற்கு பிறகு புதிய வியாபார முயற்சியில் இறங்க வேண்டாம். அரசு வகையில் அவ்வப்போது பிரச்னையைச் சந்திக்க நேரிடலாம். தொழிலாளர் ஆதரவு ஆண்டு முழுவதும் சீராக இருக்கும்.
பணியாளர்கள்: வேலைப்பளுவும், அலைச்சல் அதிகமிருக்கும். அதே நேரம் வருமானத்திற்கு குறைவிருக்காது. மார்ச் முதல் ஜூலை வரை சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். அதன் பிறகு மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிய வேண்டியதிருக்கும். எழுத்தாளர், பத்திரிகையாளர், ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் ஆகியோர் சிறப்பான வளர்ச்சி காண்பர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வளர்ச்சி காண்பர்.
கலைஞர்கள்: விடாமுயற்சி இருந்தால் மட்டுமே முன்னேற்றம் காண முடியும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
அரசியல்வாதிகள்: பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஜூலை 25க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.
மாணவர்கள்: உழைப்புக்கேற்ப கல்வியில் முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் அறிவுரை ஏற்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
விவசாயிகள்: செலவு அதிகம் பிடிக்கும் பணப் பயிர்களைத் தவிர்க்கவும்.ஆகஸ்ட் முதல் நெல், சோளம் கொள்ளு, எள், பழ வகைகள் போன்றவற்றில் மகசூல் அதிகரிக்கும். கூலி வேலை செய்பவர்கள் திருப்திகரமாக வாழ்வர்.
பெண்கள்: பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமிதம் உண்டாகும். ஊரே உங்களை போற்றி பாராட்டும். மார்ச்,ஏப்ரல் மாதங்களில் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். சுக்கிரனால் ஆடம்பர வசதி பெருகும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர்.
செல்ல வேண்டிய கோவில்: திருக்கடையூர் அபிராமி கோவில்.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு மேற்கொள்ளுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபடுங்கள். கொண்டைக்கடலை தானம் செய்வதும் நல்லது. கேதுவுக்கு நீல நிற வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.
சதுர்த்தியன்று விநாயகருக்கு விரதமிருங்கள்.