Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்ப பக்தர்களை கவரும் ரெடிமேடு ... கிறிஸ்துமஸ் சிந்தனை 5: உத்தரவுக்கு அடிபணிவோம் கிறிஸ்துமஸ் சிந்தனை 5: உத்தரவுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களை பாதிக்காமல் கோவிலில் சாய்ந்த மரம்
எழுத்தின் அளவு:
பக்தர்களை பாதிக்காமல் கோவிலில் சாய்ந்த மரம்

பதிவு செய்த நாள்

19 டிச
2016
11:12

காஞ்சிபுரம்: ’வர்தா’ புயல் கோர தாக்குதலில் பல ஆண்டுகள் பழமையான இளையனார் வேலுாரில் இருந்த அரச மரம் விழுந்தது. பல ஊர் மக்கள் வெயிலுக்கு இளைப்பாறிய மரம் விழுந்ததில் அந்த கிராமத்து மக்களை சோகத்தில் ஆழ்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புயல் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை தற்போது தான் அந்த ஊர் மக்கள் உணர்ந்து உள்ளனர்.

வேரோடு சாய்ந்தன: கடந்த திங்கள் கிழமை வீசிய புயல் காற்றில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு அதன் வேகம் இருந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் மரங்கள் சாலை மற்றும் ஆட்கள் இல்லாத இடங்களில் விழுந்து உள்ளதால் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் மரங்கள் விழுந்ததில் மக்கள் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர். காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுார் பகுதியில் சிறப்பு பெற்று விளங்கும் பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் எதிரில், 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரச மரம் இருந்தது. இந்த மரம், வர்தா புயல் காற்றுக்கு வேரோடு சாய்ந்தது. அதன் அருகில் இருந்த கோவில் தேர் மீது விழுந்து உள்ளது. இதனால் தேர் பாதுகாப்பு கூரை சேதம் அடைந்தது உள்ளது.

வெயில் காலத்தில்:
மேலும், அந்த கோவில் உற்சவத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு வெயில் காலத்தில் அடைக்கலம் கொடுத்த மரம் விழுந்ததில் அப்பகுதிவாசிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போல் மரம் வளர்ந்து பார்ப்பதற்கு இன்னும், 50 ஆண்டு காலம் ஆகும் என, அப்பகுதிவாசிகள் வருத்ததுடன் தெரிவித்தனர். வெளியூர்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் மரத்தடியில் பொங்கல் வைப்பர். கூட்ட நேரத்தில் இந்த மரங்கள் தான் அடைக்கலம் கொடுத்தது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar