வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாலை 4.30 மணிக்கு நந்திபகவான், மூலவருக்கும் பிரதோஷ வேளையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பிரதோஷ பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.